ஐதராபாத்தில் தன்னை 143 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்: சுமார் 42 பக்கங்களுக்கு FIR போடப்பட்டுள்ளதாக தகவல்...!!!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் புஞ்சகுட்டா பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் ஒன்று  அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கடந்த 2010ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது.  திருமணமான ஒரு வருடத்திற்குள் எனக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, விவாகரத்து பெற்ற எனது கணவரின் குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். கடந்த 25 ஆண்டுகளில் தன்னை 143 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சுமார் 42 பக்கங்களுக்கு FIR போடப்பட்டுள்ளது. இதில் 41 பக்கத்தில் 143 பேரின் விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் சில பெண்களும் இடம்பெற்று உள்ளனர். அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

மேலும் இந்த வன்கொடுமை சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளவர்கள், மாணவர்கள்,  தலைவர்கள், ஊடகத்தை சேர்ந்தவர்கள், திரைப்படம் மற்றும் பிற தொழில்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் பிரபலங்கள் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார். புஞ்சகுட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது பெண் அளித்துள்ள புகாரை தொடர்ந்து நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் குற்றவாளிகளையும் விசாரித்து வருகிறோம் என தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: