செல்போனை எடுக்க முயன்றபோது டிவி விழுந்து 3 வயது குழந்தை பலி: தாம்பரத்தில் சோகம்

சென்னை: செல்போனை எடுக்க முயன்றபோது டிவி விழுந்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம்தென், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி (34). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தைகள். நேற்று முன்தினம் இரவு இவர்களின் இரண்டாவது குழந்தையான கவியரசு (3) டிவியின் மீது வைக்கப்பட்டு இருந்த செல்போனை எடுக்க முயன்றான்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

அந்த சமயத்தில் டிவி குழந்தையின் தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அலறியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். பின்னர், குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: