சென்னை: செல்போனை எடுக்க முயன்றபோது டிவி விழுந்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம்தென், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி (34). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தைகள். நேற்று முன்தினம் இரவு இவர்களின் இரண்டாவது குழந்தையான கவியரசு (3) டிவியின் மீது வைக்கப்பட்டு இருந்த செல்போனை எடுக்க முயன்றான்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தான்.