டெல்லி: இந்தியாவில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய செயலிகளை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு; அவர்கள் போலியான செய்தியை பரப்பி, அதன் வழியே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். தேர்தலில் அதனை பயன்படுத்தி செல்வாக்கை பெற முயற்சிக்கின்றனர். இறுதியாக அமெரிக்க ஊடகம், முகநூலின் உண்மை பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது: சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகளை திரித்து கூறும் வேலைகளில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு சான்றாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை கவனியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.