மாஞ்சா நூல் கழுத்தறுத்து வெல்டிங் ஊழியர் காயம்

திருவொற்றியூர்: சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் மாதவன் (45). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று மதியம் மாதவரம் மூலக்கடை மேம்பாலத்தின் மீது பைக்கில் சென்றபோது, திடீரென பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் அவர் மீது விழுந்து கழுத்தை  அறுத்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர் சகிச்சை பெற்று வருகிறார். மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: