காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் முதன் முறையாக சிஆர்பிஎப் பெண் வீரர்கள் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நகரில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் முறையாக, கம்பீரமான சீருடையில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பெண் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.