சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று 7வது ஞாயிற்றுக்கிழமையாக எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இன்று அத்தியாவசிய தேவைகளான பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பத்திரிகைகள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும்.