மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து வரும்18 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். வரும் 18-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை 136  நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் கூறினார்.

Related Stories: