சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஐ.சி.யூ.வில் செயற்கை சுவாசத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். எஸ்.பி.பி.யின் உடல் நிலையை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.