கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் திமுகவில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை : திமுகவில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக கு.க.செல்வம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்திலிருந்து நீக்கி வைப்பதுடன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு  ஒழுங்கு நடவடிக்கை தலைமை கழகம் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் இன்று ஒழுங்கு நடவடிக்கை தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும்,கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படைஉறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: