சென்னை: சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு முக்கியமானது என்றும், சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று, சர்வதேச இளைஞர்கள் தினம். ஆனால், இந்த ஆண்டே ‘இளைஞர்களின் ஆண்டு’ என்று சொன்னால் மிகையாகாது. இன்றுள்ள சூழ்நிலை குறித்து இந்தாண்டு தொடக்கத்தில் நாம் எவருமே நினைத்திருக்க மாட்டோம். கொரோனா தொற்றினால் பொதுமுடக்கம் தொடங்கிய போது, பலரும் முடங்கிய வேளையில், இளைஞர்கள் தான் களமிறங்கி, அத்தியாவசியப் பொருட்களான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகித்து, தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.