சென்னை : தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,041 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2,44,675 பேர் கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 53,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை கொரோனாவால் 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 97,574 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,350 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை குணமடைந்தவர்கள் சதவீதம் 88% ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் சதவீதம் 10% மட்டுமே. கொரோனாவால் இறப்போர் விகிதம் 2.12% மட்டுமே. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,130 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.