சென்னை: தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பர் ஆன்லைன் மூலம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மூத்த தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோரின் சிலைகள் மீது காவிச்சாயம் ஊற்றியும், சேதப்படுத்தியும் அவமதிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது சம்மந்தமாக பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.