டெல்லி: இந்தியா முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டமாக ஊரடங்கு அமலில் இருநஙது வருகிறது. பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ரயில் சேவை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், மெட்ரோ என அனைத்து விதமான ரயில்களின் இயக்கங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு ரயில்கள் மட்டுமே தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.