சென்னை: அமெரிக்கா, அபுதாபி, இலங்கை ஆகிய நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 370 பேர் மீட்கப்பட்டு 4 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்துவரப்பட்டனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 90 இந்தியர்களுடன் சென்னை வந்தது. இவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவ கல்லூரிக்கு 2 பேரும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீடுகளில் தனிமைப்படுத்த 2 பேரும், 86 பேர் சென்னை நகர ஓட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர். அபுதாபியிலிருந்து 256 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. இவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவ கல்லூரிக்கு 142 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு 114 பேரும் அனுப்பப்பட்டனர்.