தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் உயிரிழப்பு முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ரஷ்ய நாட்டில் உள்ள வால்கோகிராட் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த ஆஷிக், விக்னேஷ், மனோஜ், ஸ்டீபன் ஆகிய நான்கு மாணவர்களும் நதியில் மூழ்கி பலியானதை அறிந்து  மனவேதனை அடைந்தேன். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: