தண்டையார்பேட்டை: கடந்த மாதம் 22ம் தேதி மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை காணவில்லை என உறவினர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளனர். காசிமேடு ஏ.ஜே காலனி 3வது தெருவை சேர்ந்த பாலாஜி (39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திருவொற்றியூரை சேர்ந்த மீனவர்கள் முருகன், தேசப்பன், கண்ணன், ரகு திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த பாபு, பார்த்திபன், சிவகுமார், லட்சுமணன், தேசப்பன் உள்ளிட்ட 9 மீனவர்கள் கடந்த மாதம் 22ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இதுவரை கரைக்கு வரவில்லை. அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.