மாணவர் தற்கொலை

பூந்தமல்லி: திருவேற்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரவீன் (20). தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாடியில் உள்ள அறைக்கு சென்ற பிரவின் நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. அவரது பெற்றோர் மேலே உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது, தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக மீட்டு வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   

Related Stories: