தண்டையார்பேட்டை: சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பியூஸ் (22). சவுகார்பேட்டை பகுதியில் நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை நகை பட்டறையில் 4 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசு, செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை ஆர்டரின் பேரில் செய்தார். சுமார் 4 லட்சம் மதிப்புடைய இந்த நகைகளை ஒரு பையில் வைத்து, தனது வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். வீட்டிற்கு சென்றதும், பைக்கில் வெள்ளி நகைகள் வைக்கப்பட்டு இருந்த பையை எடுக்க முயன்றபோது, அது மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே யானைக்கவுனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பியூஸுக்கு புதிய செல்போன் எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.