சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு வயதை நீட்டிக்கப்படுகிறது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வக்கீல் கற்பகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.