சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசு, இதனை விரைவாக விசாரிக்கும்படி கேட்டு மனு செய்துள்ளது. இதனை கண்டித்தும், மேல்முறையீட்டை திரும்ப பெறவும் வலியுறுத்தியும், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கால்நடைகளுடனும், தரையில் மண்டியிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.