திருச்சுழி: கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு செல்பவர்கள் குணமான பின்பு பின் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். ஒருவரும் வாகனத்தில் அழைத்து செல்ல முன்வருவதில்லை என புலம்புகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதில் குறிப்பாக நரிக்குடி பகுதி மூன்று மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் வெளி மாவட்ட நபர்கள் குறுக்கு வழியாக மாவட்டத்திற்குள் சுலபமாக நுழைந்து விடுகின்றனர். அதிகாரிகள் முன்பு காட்டிய கடுமையான சோதனை தற்போது தளர்ந்ததால் மதுரை பகுதியிலிருந்து வருகின்ற நபர்கள் இந்த பகுதியை தேர்ந்தெடுத்து மாவட்டத்திற்குள் புகுந்து விடுகின்றனர். தற்போது திருச்சுழி, நரிக்குடி பகுதியில் கொராேனா தொற்று ஆயிரத்தை நெருங்கும் நிலையில் வருவாய்துறையினர் கட்டுப்படுத்த வழியின்றி திணறி வருகின்றனர்.