கன்னியாகுமரி: கந்துவட்டி மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காசி மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் மருத்துவர் உட்பட தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலமாக 100க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம், போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.