புதுடெல்லி: கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் தனியாக வசிக்கும் ஏராளமான முதியவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களும் நோய் தடுப்பு உபகரணங்கள் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே, முதியோர் இல்லங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தரப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், வக்கீலுமான அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.