3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்

சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை செயலாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த பாஸ்கரன், வண்டலூர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜியாகவும், சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த ஜெயகவுரி சென்னை ரயில்வே டிஐஜியாகவும், சென்னை ரயில்வே டிஐஜியாக இருந்த பாண்டியன் சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: