தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது.! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருச்சி: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். திருச்சியில் முன்பு அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காய்ச்சல் முகாம் நடத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். திருச்சியில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் 1302 படுக்கைகள் உள்ளன என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

Related Stories: