மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில், கடந்த சில மாதங்களாக பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது 500 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நள்ளிதேவன் மொட்டைமலையில் 8 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.