சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் 2 சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 போலீசாருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. சென்னையில் ஊரடங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை கொத்தாவால்சாவடி சட்டம் ஒழுங்கு பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உட்பட 14 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.