விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்தது

சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறான நேற்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. சென்னை  உள்நாட்டு முனையத்திலிருந்து  புறப்படும் 28 விமானங்களில் பயணிக்க நேற்று சுமார் 2,450 பேரும், சென்னைக்கு வரும் 28 உள்நாட்டு விமானங்களில் சுமார் 2,400 பேரும் மொத்தம் 4,850 பயணிகளே இருந்தனர். திருவனந்தபுரம் விமானத்தில் 15 பேர்,கோவை 16, திருச்சி 17, வாரணாசி 19, பெங்களூரு 26 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் நேற்றுமுன்தினம் சென்னைக்கு வந்த 29 உள்நாட்டு விமானத்தில் சுமார் 3 ஆயிரம் பேரும், சென்னையில் இருந்து புறப்பட்ட 29 விமானங்களில் 3,200 பேருமாக மொத்தம் 6,200 பேர் பயணித்தனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் 1,350 பயணிகள் குறைவு.

Related Stories: