சென்னை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை வழக்கில், சுஷாந்த் சிங்கின் தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன் பீகார் துணை முதல்வர் சுசில் மோடி, மகாராஷ்டிரா காவல்துறை சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.