திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் முன்வராததால் ஆம்புலன்சிலேயே 5 மணி நேரமாக வைத்திருந்த அவலம் நடந்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த திம்னாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 40வயது வாலிபர். துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.இதையடுத்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வாலிபரின் சடலத்தை சொந்த ஊரான திம்னாமுத்தூர் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.