சென்னை: தமிழக கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வரு கின்றனர். இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமசுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவரும் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.