ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்களாகியும் அம்மா உடற்பயிற்சி கூடம் திறக்கப்படாமல் கிடக்கிறது. இதனால், பயிற்சி பொருட்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்திற்ககும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றியுள்ள இளைஞர்கள் பயன்பாட்டிற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை சார்பில் கடந்த 2016-2017ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் செலவில் அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது.