பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர், பொறியாளர் உள்பட 12 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 3 ஊழியர்கள் வீட்டில் தனிமையில் இருந்தனர். அவர்கள் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்சிற்காக வெங்கடேசா காலனியில் உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் நேற்று காலை காத்திருந்தனர்.