அச்சுறுத்தல் முடிவுக்கு வரவில்லை: மோடி எச்சரிக்கை

வானொலியில் நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நாட்டில் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, கொடிய வைரசுக்கு எதிராக நாம் இன்னும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நோய் தொற்று நேரத்தில் உள்ளூர் தயாரிப்புக்களை ஊக்குவித்த குழுக்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

Related Stories: