காஞ்சிபுரம் :காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெயில், மேகமூட்டம் என மாறிமாறி இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து தேதி ஓரளவு பரவலாக மழை பெய்து வருவதால் காஞ்சியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.