பெரியகுளம்: பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கொரோனா நோயாளிகள் நேற்று முன்தினம் இரவு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு 120 படுக்கைகளுடன் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு, 2 மாதமாக தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காததால், சத்தான உணவுகள் வழங்கியும், கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளை கொடுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குணப்படுத்தி வருகின்றனர்.