மீனம்பாக்கம்: ஜெர்மன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் இருந்து சரக்கு விமானத்தில் சென்னை வந்த பார்சல்களை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னை, சேலம் மற்றும் புதுச்சேரி முகவரியில் வந்த 4 பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவற்ைற பிரித்து பார்த்தனர். அவற்றில் போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடர்கள் இருத்தன. மனித மண்டை ஓடு மற்றும் விலங்குகள் வடிவிலான போதை மாத்திரைகளும் இருந்தன.