கொரோனாவால் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் நாராயணசாமி பதில் அளித்து பேசியதாவது: பிரதமரிடம் கொரோனா பாதிப்பு சம்பந்தமாக காணொலி காட்சி மூலம் பேசி புதுவைக்கு நிதி கொடுக்கவேண்டும் என கூறினேன். கொரோனா நிதியாக ரூ.9.16 கோடி வந்துள்ளது. கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியில் உதவி செய்ய வேண்டும் என இங்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: