குடியாத்தத்தில் நாளை முதல் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து: ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: குடியாத்தத்தில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியாத்தத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற ஜூலை 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் குடியாத்தம் நகராட்சியும் சேர இருந்தது. இந்நிலையில் குடியாத்தத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

Related Stories: