சென்னை: ஆடி பூரம் விழாவினை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ கற்பகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் , வளையல் சாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளை வருகின்ற ஜூலை 24ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று, காலை 07.30 மணி முதல் 08.30 மணி வரை நேரடியாக ஆன்லைன் காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு தீபாராதனை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்படும் என்றும், பக்தர்கள் //www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற இணையதளத்தின் YouTube channel மூலம் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி பூரம் விழாவினை முன்னிட்டு ஜூலை 24ம் தேதி, சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிறப்பு அபிஷேகம் காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்படும்: கோயில் நிர்வாகம் தகவல்..!!
- சென்னை
- மைலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் சிறப்பு அபிஷேகம்
- தினத்தன்று
- ஆடி பூரம்
- ஆடி பூரம் விழா: கோயில் மேலாண்மை தகவல்