ஆடி பூரம் விழாவினை முன்னிட்டு ஜூலை 24ம் தேதி, சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிறப்பு அபிஷேகம் காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்படும்: கோயில் நிர்வாகம் தகவல்..!!

சென்னை: ஆடி பூரம் விழாவினை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ கற்பகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் , வளையல் சாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளை  வருகின்ற ஜூலை 24ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று, காலை 07.30 மணி முதல் 08.30 மணி வரை நேரடியாக ஆன்லைன் காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சிறப்பு தீபாராதனை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்படும் என்றும், பக்தர்கள் //www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற இணையதளத்தின் YouTube channel மூலம் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் முக்கிய வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வருகின்ற 24.07.2020 வெள்ளிக் கிழமை ஆடிப்பூரம் வளைகாப்பு நிகழ்ச்சியினை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காணொலி காட்சி நிகழ்வுகளை  https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற இணைய தளத்தின் YouTube channel மூலம் வருகின்ற ஜூலை 24ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு வளைகாப்பு நிகழ்வு ஒளிபரப்பப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கோயில் வழிபாட்டு தலத்தின் நிகழ்வுகளை ஆன்லைனில் காணொலி மூலம் ஒளிபரப்புவது அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Related Stories: