வேலு பிரபாகரன் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

சென்னை: இயக்குநர் வேலு பிரபாகரன் மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி தென் சென்னை மாவட்ட தலைவர் மகேஷ் மற்றும் சேவா பாரதியின் விருதுநகர் மாவட்ட இணை செயலாளர் அரவிந்தன் சங்கர் ஆகியோர் புகார் மனுவில் அளித்துள்ளனர். ‘திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் தமிழ் கடவுள் முருகனை பற்றியும் அவர் வைத்துள்ள வேல் பற்றியும் அவதூறு பரப்பும் வகையிலும், இந்து மதத்தினரை புண்படும் வகையிலும் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: