திருமலை: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கொத்தப்பேட்டையை சேர்ந்தவர் ரேஷன் கடை டீலர் மோகன். இவரது மகன் கிரண் குமார் (26). இவர், கடந்த 18ம் தேதி தனது பைக்கில் சீராலாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொத்தப்பேட்டா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகிலுள்ள சோதனைச் சாவடிக்கு வந்தபோது, முகக் கவசம் அணியாததால் கிரண் குமாரின் பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால், போலீசார் அவரை தாக்கினர். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்த கிரண் குமாரின் பெற்றோர் போலீசாரிடம் இருந்து கிரண் குமாரை அழைத்துச் சென்று சீராலா மருத்துவமனையில் சேர்த்தனர்.