நாங்குநேரி: நாங்குநேரி அருகே விதிமுறைமீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் இருந்து குமரி மாவட்ட ரயில்வே ஒப்பந்த பணிகளுக்கு தினமும் வாகனங்களில் கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி செல்வதால் நாங்குநேரி - மூலைக்கரைப்பட்டி சாலை சேதமாகி வருவதுடன் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.