சென்னை : வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருகிற 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்திற்கு 41, திருச்சி-11, கோவை - 4, மதுரை - 2 விமானங்கள் இயக்கப்படுகிறது.