‘என்னை சிவன் அழைத்தார். நான் அவரிடம் போகிறேன்’ கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை

கோவை: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (24). இவர் 5 நாளுக்கு முன் வீட்டில் இருந்து வெளிேய சென்றார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இவரது பெற்றோர் போலீசில் மகனை காணவில்லை என புகார் அளித்திருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் இவர், நேற்று வெள்ளிங்கிரி 7வது மலையில் ஒரு மரத்தில் தூக்குபோட்டு இறந்து கிடந்தார். ஆடி அமாவாசையையொட்டி மலையேறி சென்ற பக்தர்கள் சடலத்தை பார்த்து வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மகாதேவன், தனது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.  அதில், ‘‘அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். என்னை சிவன் அழைத்தார். நான் அவரிடம் போகிறேன், என் சாவுக்கு யாரும் காரணமல்ல. நீங்கள் நிம்மதியாக இருங்கள்’’ என எழுதியிருந்தார்.

அவர் 5 நாளுக்கு முன் காரமடையில் வசிக்கும் தனது அண்ணனின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியிருந்தார். அதிலும், ‘‘நான் சிவனிடம் போகிறேன், குடும்பத்தை பார்த்து கொள்’’ என தெரிவித்திருந்தார்.  அவரது செல்போன் அதற்கு பிறகு ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மகாதேவன் போலீஸ் வேலைக்கு தீவிரமாக முயற்சி செய்து வந்தார். எழுத்து தேர்விற்கு அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த கடிதத்தையும் தனது பாக்கெட்டில் வைத்திருந்துள்ளார். மகாதேவன் இறந்து 5 நாள் இருக்கலாம் என தெரிகிறது, சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: