சேலம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (22ம்தேதி) வேலை நிறுத்தப்போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து 12லட்சம் வாகனங்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறியதாவது: டீசல் விலை உயர்வு, லாரி ஓடாத நாட்களுக்கு சாலை வரி வசூலிப்பு, பழைய வாகனங்களின் உரிமையை ரத்து செய்வது, காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, போலீசார் பொய் வழக்குகள் பதிந்து அபராதம் வசூலிப்பது போன்ற காரணங்களால், லாரி தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.