வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை மற்றும் ஆடி அமாவாசை திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். இதில், தேனி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் உப்புத்துறை கோயிலில் ஏற்கனவே சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.