தஞ்சை: தஞ்சை மாநகராட்சி கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வரை டாஸ்மாக் உள்பட அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரை தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் அதிகம் கொரோனா பரவி வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவுத்துள்ளது. மேலும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.