சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சியினர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சைப்படுத்தி, இழிவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை சுரேந்தர் (எ) நாத்திகன் (33) மற்றும் தயாரிப்பாளர், எடிட்டர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இந்தனர்.
அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 16ம் தேதி இந்த வீடியோவை வெளியிட்ட சுரேந்தர் (எ) நாத்திகன் புதுச்சேரி, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தி சிறையில் அடைத்தனர்.