புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டிலேயே முதல் முறையாக தெற்கு டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆராய்ச்சி மையத்தில் பிளாஸ்மா வங்கியை தொடங்கினார். தற்போது வரை இம்மாநிலத்தில் 3 பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன.